இத்தினமானது, நமது சுற்றுச்சூழல் அமைப்பில் கடல் ஆமைகளின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து அவற்றைப் பற்றி எடுத்துரைத்து, அவற்றின் எண்ணிக்கைக் குறைந்து வருவது பற்றிய விழிப்புணர்வைப் பரப்புகிறது.
இந்தத் தினமானது, கடல் ஆமை உயிரியலின் தந்தை மற்றும் கடல் ஆமை பாதுகாப்பு அமைப்பின் நிறுவனரான டாக்டர்.ஆர்ச்சி கார் என்பவருக்காக அர்ப்பணிக்கப்பட்ட தினமாகும்.