புனே அருகே உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாத் என்னுமிடத்தில் உலகத்தரமிக்க அறிவியல் நகரை அமைக்க மகாராஷ்டிரா மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மாணவர்களிடையே அறிவியல் கண்ணோட்டத்தை உருவாக்கச் செய்வதற்காகவும் வருங்காலத்தில் அவர்களை சிறந்த மாணவர்களாக தயார் செய்வதற்காகவும் வேண்டி இது உருவாக்கப்பட உள்ளது.
இதற்கு ‘பாரத் ரத்னா ராஜீவ் காந்தி அறிவியல் புத்தாக்க நகரம்’ எனப் பெயரிடப்பட உள்ளது.