TNPSC Thervupettagam

உலகத் தொழுநோய் தினம் - ஜனவரி 30

January 31 , 2020 1703 days 539 0
  • உலகத் தொழுநோய் தினமானது ஜனவரி கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று அனுசரிக்கப்படுகின்றது. இது தொழுநோய் குறித்த பொது விழிப்புணர்வை அதிகரிக்க முற்படுவதுடன், குழந்தைகளில் தொழுநோய் தொடர்பான குறைபாடுகளற்ற இலக்கின் மீது கவனம் செலுத்துகின்றது.
  • இந்தியாவில் இத்தினமானது மகாத்மா காந்தியின் இறப்பை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.
  • தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களிடம் வாழ்நாள் முழுவதும் இரக்கம் கொண்டிருந்த காந்திக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்தத் தினமானது  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு, “தொழுநோய்களின் களங்கத்தை மாற்றுதல்” என்பதாகும்.
  • தொழுநோய் என்பது ஒரு தொற்று நோயாகும். இது உடலில் உள்ள கைகள், கால்கள் மற்றும் தோல் பகுதிகளில் கடுமையான, சிதைக்கும் தன்மையுள்ள தோல் புண்கள் மற்றும் நரம்பு ஆகியவற்றில் சேதத்தை ஏற்படுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்