கடந்த ஏழு ஆண்டுகளானது மிக வெப்பமானதாக பதிவாகியுள்ளதாகவும் 2013 ஆம் ஆண்டு முதல் கடல்மட்ட உயர்வு துரிதப்படுத்தப் பட்டு 2021 ஆம் ஆண்டில் அது புதிய ஒரு உச்சத்தை எட்டியுள்ளதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.
கடல்நீர் வெப்பமடைதல் மற்றும் கடல்நீர் அமிலமாக்கல் ஆகியவை கடல்நீர் மட்டம் உயர்வதற்கான காரணம் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
COP26 மாநாட்டின் போது தண்ணீர் வளம் மற்றும் பருவநிலை தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக உலக வானிலை அமைப்பு தண்ணீர் வளம் மற்றும் பருவநிலை கூட்டணியைத் தொடங்கியது.
வானிலை குறித்தக் கணிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் போன்றவற்றை மேம்படுத்தச் செய்வதற்காக ஒரு முறையான கண்காணிப்பு நிதி வசதியையும் இது தொடங்கியது.