TNPSC Thervupettagam

உலகப் புற்றுநோய் தினம் – பிப்ரவரி 04

February 6 , 2020 1697 days 443 0
  • புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் உலகப் புற்றுநோய் தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
  • 2020 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு,“I am and I will” என்பதாகும்.
  • இந்தக் கருத்துருவானது அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
  • உடலின் திசு அல்லது உறுப்புகளில் உள்ள உயிரணுக்களின் கட்டுப்பாடற்ற, அசாதாரண வளர்ச்சியினால் புற்றுநோய் ஏற்படுகின்றது.
  • இது உலகளவில் நிகழும் மரணங்களுக்கு இரண்டாவது முக்கியக் காரணமாக விளங்குகின்றது.
  • உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஆறு நபர்களில் ஒருவர் புற்றுநோயினால் இறக்கின்றார்.
  • புற்றுநோயினால் ஏற்படும் ஏறக்குறைய 70% இறப்புகள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நிகழ்கின்றது.
  • உலகப் புற்றுநோய் தினத்தைக் (பிப்ரவரி 4) குறிப்பதற்காக உலக சுகாதார நிறுவனம் மற்றும் புற்றுநோய் தொடர்பான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் (IARC - International Agency for Research on Cancer) ஆகியவை பின்வரும் இரண்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. அவையாவன:
    • புற்றுநோய் குறித்த அறிக்கை: முன்னுரிமைகளை வரிசைப்படுத்துதல், பயனுள்ள வகையில் முதலீடு செய்தல் மற்றும் அனைவருக்கும் பாதுகாப்பு அளித்தல்”.
  • உலக புற்றுநோய் அறிக்கை: புற்றுநோய் தடுப்புக்கான புற்றுநோய் ஆராய்ச்சி” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்