TNPSC Thervupettagam

உலகளாவிய காலமுறை மறுமதிப்பீட்டு அறிக்கை

September 17 , 2023 306 days 189 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை செயலகமானது ஒரு தொகுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்தத் தொகுப்பு அறிக்கை ஆனது ' உலகளாவிய காலமுறை மறுமதிப்பீடு' எனப்படும் ஒரு மாபெரும் நடவடிக்கையுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது.
  • இது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • 2015 ஆம் ஆண்டில், பாரிசு நகரில் நடைபெற்ற மாநாட்டில் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் புவியின் வெப்பநிலையானது 2 டிகிரி செல்சியஸுக்கு அப்பால் உயராமல் இருக்கவும், "முடிந்தவரையில்" சுமார் 1.5 டிகிரி செல்சியஸுக்குக் குறைவாகவும் வைத்திருப்பதற்கான உறுதிப்பாட்டினை உலக நாடுகள் மேற்கொண்டன.
  • பசுமை இல்ல வாயுக்கள் மற்றும் அவற்றின் புதைபடிவ எரிபொருள் சார்ந்த ஆற்றல் அமைப்புகளைப் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களுக்கு மாற்றுவதில் தனிப்பட்ட நாடுகளால் மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகளை அவ்வப்போது மதிப்பாய்வு செய்யவும் அல்லது மறுமதிப்பீடு செய்யவும் அந்நாடுகள் ஒப்புக்கொண்டன.
  • பாரீஸ் ஒப்பந்த இலக்குகளை அடைவதற்கான பாதையில் உலக நாடுகள் செயல்பட வில்லை என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
  • 166 நாடுகளின் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்டப் பங்களிப்புகள் பரிசீலனை செய்யப் பட்டு, பாரீஸ் ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்ட இலக்குகளை அடைய அவை போதுமானதாக இல்லை என்ற கூறப்பட்டது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய பசுமை இல்ல வாயு உமிழ்வினை 43% குறைப்பதற்கு அதிக லட்சியப் போக்கு மிக்க நடவடிக்கை தேவைப்படுகிறது.
  • மேலும் 2035 ஆம் ஆண்டிற்குள் 60% குறைப்பதற்கும் மற்றும் 2050 ஆம் ஆண்டில் உலகளவில் நிகர சுழி அளவிலான CO2 உமிழ்வை எட்டவும் அதிக லட்சியப் போக்கு மிக்க நடவடிக்கை தேவைப்படுகிறது.
  • 2030 ஆம் ஆண்டிற்கு முந்தையக் காலகட்டத்தில் வளர்ந்து வரும் நாடுகள் இந்த இலக்கை அடைய 5.8-5.9 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகிறது.
  • மேலும், 2050 ஆம் ஆண்டில் நிகர சுழி உமிழ்வு நிலையை அடைவதற்காக 2030 ஆம் ஆண்டிற்குள் தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பங்களை நிறுவ ஆண்டிற்கு 4 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவை என இந்த அறிக்கை கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்