ஐக்கிய இராஜ்ஜியம் தலைமையிலான உலகளாவிய நோய்த் தடுப்பு மருந்து மீதான மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள இருக்கின்றது.
50 நாடுகள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் இந்தியாவும் ஒன்றாகும்.
இந்த மாநாடானது நோய்த் தடுப்பு மருந்துக் கூட்டமைப்பான “GAVI” என்ற அமைப்பிற்காக குறைந்தது 7.4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு நிதியைத் திரட்டுவதற்காக நடத்தப் படுகின்றது.
“GAVI” என்ற கூட்டமைப்பானது யுனிசெப், உலக சுகாதார நிறுவனம், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, உலக வங்கி, ஆராய்ச்சி நிறுவனங்கள், தடுப்பு மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் இதர தனியார் நிறுவனப் பங்களிப்பாளர்கள் ஆகியோருடன் இணைந்து 2000 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.