கோவிட் – 19 உலகளாவிய பாலின எதிர்வினைக் கண்காணிப்பகமானது ஐக்கிய நாடுகள் பெண்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றினால் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
இது நாடுகளின் பாலின அடிப்டையிலான வன்முறை, செலவற்றச் சுகாதார நலத்தைச் ஆதரித்தல் மற்றும் பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பு ஆகிய 3 பிரிவுகளின் கீழ் ஆய்வு நடத்தியுள்ளது.
இந்த அறிக்கையின்படி, 8 நாடுகளில் 1 நாடு மட்டுமே கோவிட் – 19 நோய்த் தொற்றுத் தாக்கத்திலிருந்து பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
135 நாடுகளில் 71% அளவு பாலின அடிப்படையிலான வன்முறையைக் கையாள்வது குறித்து கவனம் செலுத்துகின்றன.
பாலின அடிப்படையிலான வன்முறையைக் களைவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் ஐரோப்பா முன்னணியில் உள்ளது. இங்கு 32% அனைத்து வன்முறைத் தடுப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன.
வட அமெரிக்கக் கண்டமானது பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட அதிக எண்ணிக்கையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கு அடுத்து ஆப்பிரிக்கா இது குறித்து அதிக அளவிலான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
ஐரோப்பாவானது செலவற்ற சுகாதார நலத்தைச் செயல்படுத்துவதில் முன்னணியில் உள்ளது. இது இந்தக் கண்காணிப்பு அறிக்கையில் 49% அனைத்து செலவற்ற சுகாதார நலங்களைக் கொண்டுள்ளன.