TNPSC Thervupettagam

உலகின் சிறந்த 30 சிஇஒ பட்டியல் – பாரோன் பத்திரிக்கை

June 3 , 2018 2269 days 617 0
  • தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாக, ஹெச்டிஎப்சி (HDFC) வங்கியின் நிறுவன இயக்குநர் ஆதித்ய பூரி புகழ்பெற்ற நீதித்துறை பத்திரிக்கையான பாரோன் வெளியிடும் உலகின் தலைசிறந்த 30 தலைமை நிர்வாக அதிகாரி பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
  • இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய தலைமை அதிகாரி ஆதித்ய பூரி ஆவார்.
  • இப்பட்டியலானது தமது 14வது பதிப்பில், அமேசானின் ஜெப் பெஜோஸ், பெர்க்கையர் ஹாத்வேயின் வாரன் பப்பெட், JP மார்கன் சேஸின் ஜேமி டைமோன் , நெட்ப்ளிக்ஸின் பீட்ஹெஸ்டிங்ஸ், மைக்ரோசாப்டின் சத்ய நாதெள்ளா மற்றும் பேஸ்புக்கின் மார்க் ஜீகர்பெர்க் ஆகியோரையும் கொண்டதாகும்.
  • தலைமை அதிகாரிகளுக்கென்று வகுத்த 3 பட்டியலில், ஆதித்ய பூரி முன்னேறும் தலைவர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
  • மற்ற இரு பிரிவுகளாவன – தொலைநோக்கு கொண்ட நிறுவனர்கள் மற்றும் மாற்றம் ஏற்படுத்தும் நிபுணர்கள்.
  • 67 வயதான ஆதித்ய பூரி 1994 HDFC வங்கி துவங்கிய காலத்தில் இருந்தே அதன் மேலாண்மை இயக்குநராக உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்