இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தாஷிகாங் என்ற குக்கிராமமானது உலகின் மிக உயரத்தில் அமைந்துள்ள வாக்குப்பதிவு மையமாக உருவெடுத்துள்ளது.
இது இமாச்சலப் பிரதேசத்தின் லகவுல்-ஸ்பிடி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான புத்த சமயத்தைச் சேர்ந்தவர்கள் வாழும் பகுதியில் அமைந்துள்ளது. இது 15, 256 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
மொத்தமுள்ள 17 சட்டமன்றத் தொகுதிகளில் ஒரு தொகுதியான “மாண்டியா” மக்களவைத் தொகுதியில் இந்த வாக்குச் சாவடி மையம் அமைந்துள்ளது. இது நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தொகுதியாகும்.