TNPSC Thervupettagam

உலகின் முதலாவது துகள்மப் பொருள்கள் வர்த்தகம் – குஜராத்

September 25 , 2019 1761 days 691 0
  • துகள்மப் பொருள் உமிழ்வுகளை வர்த்தகம் செய்வதற்காக “உலகின் முதலாவது சந்தை” என்று கூறப்படும் ஒரு திட்டத்தை குஜராத் அரசாங்கம் தொடங்கியுள்ளது.
  • இந்தத் துகள்மப் பொருள் உமிழ்வு வர்த்தகத் திட்டம் (emission trading scheme - ETS) சூரத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
  • ETS ஆனது பின்வருவனவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
    • ஒரு பகுதியில் மாசுபாட்டின் அளவைக் குறைத்தல்
    • தொழில் துறைக்கான இணக்க செலவைக் குறைத்தல்.
  • குஜராத் மாசு கட்டுப்பாட்டு வாரியமானது (Gujarat Pollution Control Board  - GPCB) அனைத்துத் தொழில் துறைகளிலிருந்தும் வெளியேறும் மொத்த உமிழ்வின் உச்சபட்ச அளவை நிர்ணயிக்கின்றது.
  • இந்த உச்சபட்ச அளவின் கீழ், வர்த்தக அனுமதிகள் மூலம் (கிலோகிராமில்) பல்வேறு தொழிற்சாலைகள் இந்தத் துகள்களை வெளியேற்றும் திறனை வாங்கலாம் மற்றும் விற்கலாம்.
  • இந்தக் காரணத்திற்காக, ETS  ஆனது ஒரு உச்சபட்ச மற்றும் வர்த்தக சந்தை என்றும் அழைக்கப்படுகின்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்