உலகெங்கிலும் உள்ள ஆமைகள் மற்றும் அவற்றின் அழிந்து வரும் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கான ஒரு விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
பூமியின் சூழலியல் வடிவமைப்பில் கடல் ஆமைகள் மற்றும் ஆமைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இந்த ஊர்வன இனங்களானது, உலகெங்கிலும் உள்ள பல்வேறு வாழ்விடங்களில் உயிர் வாழ்வதாகவும் செழித்து வளர்வதாகவும் அறியப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான உலக ஆமை தினத்தின் கருத்துரு, “ஷெல்பிரேட்” (Shellebrate) என்பதாகும்.
இந்தக் கருத்துரு, "எல்லோரும் ஆமைகளை நேசிக்கவும் காப்பாற்றவும்" என்று எடுத்து உரைக்கிறது.