சர்வதேச எரிசக்தி முகமையானது (IEA) உலக எரிசக்தி ஆற்றல் அறிக்கையை வெளியிட்டது.
இந்த முதலாவது உலக ஆற்றல் வேலைவாய்ப்பு அறிக்கையானது, உலகளாவிய ஆற்றல் செயல்பாட்டு அமைப்பின் முதல் விரிவான அறிக்கையாகும்.
2019 ஆம் ஆண்டில், எரிசக்தி துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற துறைகளில் 65 மில்லியன் மக்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
உலகெங்கிலும் உள்ள முறைசார் வேலைவாய்ப்புகளில் இது இரண்டு சதவிகிதம் ஆகும்.
இந்தத் துறையில் நேரடியாக 41 மில்லியன் மக்கள் வேலைவாய்ப்புப் பெற்றதோடு, 24 மில்லியன் பேர் வாகன உற்பத்தி போன்ற ஆற்றலின் இறுதிப் பயனர் பயன்பாட்டுத் துறைகளிலும் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
2021 ஆம் ஆண்டில் ஆற்றல் துறை முழுவதும் பணியமர்த்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1.3 மில்லியன் ஆக அதிகரித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் இது 6 சதவீதம் அதிகரிக்கலாம்.
2019 ஆம் ஆண்டில், 50 சதவீத ஆற்றல் துறை சார்ந்த பணியாளர்கள் தூய்மையான எரி சக்தித் தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் பணியமர்த்தப்பட்டனர்.
புதைபடிவ எரிபொருட்களில், 2019 ஆம் ஆண்டில் எண்ணெய் விநியோகத் துறையில் 8 மில்லியன் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதால் அதிகளவுத் தொழிலாளர்ப் பங்கேற்பினை இத்துறை கொண்டுள்ளது.
இது 2021 ஆம் ஆண்டில் 7.1 மில்லியன் ஆக குறைந்துள்ளதோடு 2022 ஆம் ஆண்டில் இது சற்று அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
எரிசக்தி முதலீடு 2022 ஆம் ஆண்டில் எட்டு சதவிகிதம் அதிகரித்து 2.4 டிரில்லியன் டாலர்களைத் தொடும் என எதிர்பார்க்கப் படுகிறது.