TNPSC Thervupettagam

உலக இட்லி தினம் – மார்ச் 30

March 31 , 2020 1642 days 451 0
  • உலக இட்லி தினமானது சென்னையில் வசிக்கும் புகழ்பெற்ற உணவு சமையல் கலைஞரான இனியவன் என்பவரால் தொடங்கப்பட்டது.
  • இது 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இட்லி ஆனது இந்தியப் பிரதான உணவாக இருந்த போதிலும், சில வரலாற்றாசிரியர்கள் இதன் தாயகம் இந்தோனேசியா என்று கூறுகின்றனர்.
  • இந்த நாடானது நொதிக்க வைத்தல் உணவிற்கான மிகச் சிறப்பான ஒரு நாடாகக் கருதப்படுகின்றது.
  • இந்தப் பாரம்பரியமானது “வேக வைக்கப்பட்ட இட்லியாக” பொது ஆண்டு 800 முதல்  பொது ஆண்டு 1200 வரையிலான காலகட்டங்களில்  இந்தியாவிற்கு வந்தது.
  • உளுந்தம்பருப்பு மாவிலிருந்துத் தயாரிக்கப்பட்ட உணவு வகையான “இட்லியஜ்” என்ற வார்த்தையிலிருந்து “இட்லி” என்ற பெயர் வந்துள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
  • இது கி.பி. 920 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு கன்னட நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது.
  • இது தவிர்த்து கி.பி.1130 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சமஸ்கிருத மனசோல்சா என்ற நூலானது உளுந்தம்பருப்பிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு உணவான “இடாரிகா” என்ற உணவைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.
  • 17 ஆம் நூற்றாண்டில், தமிழ் மக்கள் முதன் முறையாக “இட்லி” என்ற ஒரு உணவை அழைத்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்