2வது “உலக உணவுப் பொருட்கள்- இந்தியா 2023” என்ற மூன்று நாட்கள் அளவிலான நிகழ்ச்சியானது புது டெல்லியில் நடைபெற்றது.
இது இந்தியாவை “உலகின் உணவுப் பெட்டகமாக” காட்சிப்படுத்துவதையும், 2023 ஆம் ஆண்டினை சர்வதேச சிறு தானியங்கள் ஆண்டாகக் கொண்டாடுவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
நெதர்லாந்து நாடானது பங்குதாரர் நாடாகவும், ஜப்பான் இந்த நிகழ்வின் முக்கிய இலக்கு நாடாகவும் பங்கு பெற்றுள்ளன.
முதலாவது நிகழ்ச்சியானது 2017 ஆம் ஆண்டில் நடைபெற்றது.