TNPSC Thervupettagam

உலக எறும்புத் திண்ணி தினம் - பிப்ரவரி 15

February 18 , 2020 1685 days 444 0
  • எறும்புத் திண்ணிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்தத் தனித்துவமான உயிரினங்களை அழிவிலிருந்துப் பாதுகாக்கவும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 3வது சனிக்கிழமையன்று உலக எறும்புத் திண்ணி தினமானது அனுசரிக்கப்பட இருக்கின்றது.
  • 9வது உலக எறும்புத் திண்ணி தினமானது 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 அன்று அனுசரிக்கப் பட்டது.
  • மத்தியப் பிரதேச வனத்துறையும் வனவிலங்குப் பாதுகாப்பு அறக்கட்டளையும் இணைந்து முதன்முறையாக இந்த இனத்தின் சுற்றுச்சூழலை அறிந்து கொள்வதற்காகவும் பயனுள்ள பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்குவதற்காகவும் ஒரு இந்திய எறும்புத் திண்ணியை (மனிஸ் கிராசிகுடாட்டா) வானலை அடையாளத்துடன் இணைத்துள்ளது.
  • எறும்புத் திண்ணிகள் "செதில் எறும்புத் திண்ணிகள்" என்றும் அழைக்கப்படுகின்றன. இது பல் இல்லாத ஒரு விலங்கு இனமாகும். உலகில் மிக அதிக அளவில் கடத்தப்படும் வனவிலங்கு இனங்களில் ஒன்றாக இது விளங்குகின்றது.
  • இந்தியா 2 வகையான எறும்புத் திண்ணிகளுக்கு வாழிடமாகத் திகழ்கின்றது. சீன எறும்புத் திண்ணிகள் (மனிஸ் பென்டாடாக்டைலா) வடகிழக்கு இந்தியாவிலும் இந்திய எறும்புத் திண்ணிகள் நாட்டின் பிற பகுதிகளிலும் (இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான்) பரவிக் காணப்படுகின்றன.
  • இந்த 2 இனங்கள் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972ன் அட்டவணை Iன் பகுதி 1ன் கீழ் மற்றும் CITESன் பட்டியல் Iன் கீழ் (வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் ஆபத்தான இனங்களில் சர்வதேச வர்த்தகம் மீதான ஒப்பந்தம் - Convention on International Trade in Endangered Species) பட்டியலிடப்பட்டுப் பாதுகாக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்