சமீபத்தில், மூன்றாவது உலக கடல்சார் இந்தியா உச்சி மாநாடானது மும்பையில் நடைபெற்றது.
கடல்சார் நீலப் பொருளாதாரத்திற்கான செயல்திட்டமும் இந்நிகழ்ச்சியில் வெளியிடப் பட்டது.
துறைமுக வசதிகளை மேம்படுத்துதல், நிலையான நடைமுறைகளை ஊக்குவித்தல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை உருவாக்குதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட உத்திசார் முன்னெடுப்புகளை இந்த செயல்திட்டம் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
முதலாவது கடல்சார் இந்தியா உச்சிமாநாடு ஆனது 2016 ஆம் ஆண்டில் மும்பையிலும், இரண்டாவது கடல்சார் உச்சி மாநாடு 2021 ஆம் ஆண்டில் காணொலிக் காட்சி வாயிலாகவும் நடைபெற்றது.