மனித நடவடிக்கைகளால் உமிழப்படும் கரிமத்தைக் கணக்கிடச் செய்யும் ஒரு அறிவியலாளர்கள் குழுவான உலக கரிமத் திட்டத்தால் இந்த அறிக்கை வெளியிடப் பட்டது.
இந்த அறிக்கை வளிமண்டலத்தில் கரியமில வாயு குறைந்ததற்கான தடயம் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளது.
புவி உடனடியாக வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்குள் தடுத்து நிறுத்த வேண்டிய ஒரு கட்டாயத்தில் உள்ளது.
2022ம் ஆண்டில் வளிமண்டலத்தில் செலுத்தப்படும் உலகளாவியக் கரிம உமிழ்வுகளின் அளவானது 40.6 பில்லியன் டன்கள் கரியமில வாயு என்ற அளவினை எட்டும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
இந்தக் கணிப்பானது, 2019 ஆம் ஆண்டில் மொத்த வருடாந்திர அளவில் மிக அதிக அளவில் உமிழப்பட்ட 40.9 பில்லியன் டன்கள் கரியமில வாயு என்ற அளவிற்கு மிக அருகாமையில் உள்ளது.
கணிக்கப்பட்ட உமிழ்வில், சீனா (0.9 சதவிகிதம்), ஐரோப்பிய ஒன்றியம் (0.8 சதவிகிதம்) ஆகியவற்றில் குறைந்தாலும், அமெரிக்கா (1.5 சதவிகிதம்), இந்தியா (6 சதவிகிதம்) மற்றும் எஞ்சியிருக்கும் உலகின் பிற பகுதிகளில் (1.7 சதவிகிதம்) அதிகரிக்கும்.
2022ம் ஆண்டில் இந்தியாவில் பெரும்பாலும் நிலக்கரி உமிழ்வில் ஏற்படும் ஒரு ஐந்து சதவிகித அதிகரிப்பால், 6 சதவிகித அளவிற்கு அதிக அளவிலான உமிழ்வு ஏற்படும்.
2021 ஆம் ஆண்டில், உலகளாவியக் கரிம உமிழ்வுகளில் சீனா (31 சதவிகிதம்), அமெரிக்கா (14 சதவிகிதம்) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (8 சதவிகிதம்) ஆகியன பெரும்பான்மையான உமிழ்வு நாடுகளாகும்.
இந்தியா உலக கரிம உமிழ்வில் 7 சதவிகிதப் பங்களிப்பைக் கொண்டுள்ளது.
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2022ம் ஆண்டில் இந்தியாவானது உலகில் கரிம உமிழ்வில் மிக அதிக அளவிலான அதிகரிப்பைச் சந்திக்க உள்ளதாக எதிர்பார்க்கப் படுகின்றது.
கரிம உமிழ்வில் இரண்டாவது பெரிய அதிகரிப்பினை அமெரிக்கா பதிவு செய்ய உள்ளதாக கணிக்கப்பட்டு இருக்கின்றது.
மொத்த உமிழ்வு அளவில் உலகளவில் இந்தியா மூன்றாவது இடத்திலும், தனிநபர் உமிழ்வில் இந்தியா உலகில் மிகவும் குறைவானது என்றும் தரவரிசைப் படுத்தப் பட்டு உள்ளது.