உலக சுகாதார அமைப்பானது 2022 ஆம் ஆண்டிற்கான உலக காசநோய் அறிக்கையினை வெளியிட்டது.
உலகளாவிய, பிராந்திய மற்றும் தேசிய அளவில் காச நோயைத் தடுத்தல், கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல் ஆகியவற்றில் காசநோய் என்ற தொற்றுநோய் மீதான பல்வேறு நாடுகளின் முன்னேற்றம் பற்றிய விரிவான மதிப்பீட்டை வழங்குவதற்காக ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படுகிறது.
2021 ஆம் ஆண்டில் 10.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காசநோயால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
2020 ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களுடன் ஒப்பிடும் போது இது 4.5 சதவீதம் அதிகம் ஆகும்.
6 மில்லியன் மக்கள் காசநோயால் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் 187,000 பேர் எச்.ஐ.வி நோயாளிகள் ஆவர்.
2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் மருந்துகளுக்கு எதிர்ப்புத்திறன் கொண்ட காசநோயின் (DR-TB) பாதிப்பு 3 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு, 450 000 புதிய ரிஃபாம்பிசின் மருந்திற்கு எதிர்ப்புத் திறன் கொண்ட காச நோய் (RR-TB) பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டன.
2019 ஆம் ஆண்டில் 7.1 மில்லியனாக இருந்த காசநோய்ப் பாதிப்புகளின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டில் 5.8 மில்லியனாகக் குறைந்துள்ளது.
2021 ஆம் ஆண்டில் இந்த நிலைமை மாறியதோடு 6.4 மில்லியன் மக்கள் இந்த காச நோயினால் பாதிக்கப் பட்டனர்.
2019 ஆம் ஆண்டில் 6 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த அத்தியாவசிய காசநோய் சேவைகளுக்கான உலக நாடுகளின் செலவானது 2021 ஆம் ஆண்டில் 5.4 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளது.
இது 2022 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய இலக்கான 13 பில்லியன் அமெரிக்க டாலர்களில் 50 சதவீதத்திற்கும் குறைவாகும்.
கடந்த 10 ஆண்டுகளில், 2021 ஆம் ஆண்டில் காசநோய் சேவைகளுக்காக வழங்கப்பட்ட நிதியில் 79 சதவீதம் உள்நாட்டு வருவாய் மூலங்களிலிருந்து பெறப்பட்டது.