1882 ஆம் ஆண்டு மார்ச் 24 அன்று டாக்டர் இராபர்ட் காசநோய் உருவாகுவதற்கு ”டிபி பேசில்லஸ்” என்ற பாக்டீரியா தான் காரணம் என்று அறிவித்த நாளினை நினைவு கூரும் விதமாக இந்நாள் கடைபிடிக்கப் படுகிறது.
2021 ஆம் ஆண்டிற்கான உலக காசநோய் தினத்தின் கருத்துரு, “கடிகார முள் நகர்ந்துக் கொண்டிருக்கிறது” (The clock is ticking) என்பதாகும்.
காசநோய் என்பது இந்தியாவில் நிலவும் மிகப் பெரிய சுகாதாரப் பிரச்சினைகளில் ஒன்றாகும்.
இது மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் எனப்படும் ஒரு பாக்டீரியத்தால் உருவாக்கப் படுகிறது.
இந்த பாக்டீரியா நுரையீரல், சிறுநீரகம், முதுகுத் தண்டு, மூளை ஆகியவற்றைப் பாதிக்கிறது.
2020 ஆம் ஆண்டில் இந்திய அரசு தனது தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் மூலம் 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் காசநோயினை ஒழிப்பதாக அறிவித்துள்ளது.
நிக்சய் போஷன் யோஜனா என்பது காசநோய் நோயாளிகளுக்கு உணவு வாங்குவதற்கு மாதத்திற்கு ரூ.500 வழங்கும் இந்திய அரசின் ஒரு திட்டம் ஆகும்.
இது உலக சுகாதார அமைப்பினால் தொடங்கப்பட்ட பதினோரு உலகளாவிய பொது சுகாதார திட்டங்களில் ஒரு பிரச்சார தினமாகும்.