இந்தத் தினமானது கேட்புத் திறன் இழப்பு மற்றும் காது கேளாமையை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் உலகம் முழுவதும் காது மற்றும் செவித்திறன் நலன் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஒவ்வோர் ஆண்டும் அனுசரிக்கப் படுகின்றது.
உலக சுகாதார நிறுவனமானது இந்த வருடாந்திர உலகக் கேட்புத்திறன் தின நிகழ்வை ஏற்படுத்துகின்றது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “அனைவருக்குமான கேட்புத்திறன்! சோதனை செய்தல், மீட்டெடுத்தல், தகவல் தெரிவித்தல்” என்பதாகும்.
உலகக் கேட்புத் திறன் தினம் – 2021 ஆனது கேட்புத்திறன் குறித்த முதலாவது உலக அறிக்கை வெளியிடப் பட்டதைக் குறிக்கின்றது.
இந்த அறிக்கையின்படி, 2050 ஆம் ஆண்டில் 4ல் 1 நபர் செவித் திறன் குறைபாட்டைக் கொண்டிருப்பர் என்று கணிக்கப்பட்டுள்ளது.