சர்வதேச தொழிலாளர் அமைப்பானது, 2008 ஆம் ஆண்டு ஜூன் 10 அன்று ஒரு நியாயமான உலகமயமாக்கலுக்காக, சமூக நீதிக்கான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரகடனத்தை ஒரு மனதாக ஏற்றுக் கொண்டது.
சமூக நீதி என்பது நாட்டினுள் மற்றும் நாடுகளுக்கு இடையே நிலவ வேண்டிய அமைதியான மற்றும் வளமான சகவாழ்வுக்கான ஒரு அடிப்படைக் கொள்கையாகும்.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "முறையான வேலைவாய்ப்பு மூலம் சமூக நீதியை அடைதல்" என்பதாகும்.