இத்தினம் பொதுவான வீட்டுக் குருவிகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் அவற்றைப் பாதுகாப்பதற்காகவும் கடைபிடிக்கப்படும் ஒரு நாளாகும்.
பிரான்சு நாட்டினுடைய Eco-Sys Action Foundation என்ற அமைப்புடன் இணைந்து ‘Nature Forever Society of India’ என்ற அமைப்பால் தொடங்கப்பட்ட ஒரு சர்வதேச தொடக்கமே உலக சிட்டுக் குருவி தினமாகும்.
‘Nature Forever Society of India/ என்ற அமைப்பினை ஒரு இந்திய இயற்கை ஆர்வலரான முகமது திலாவார் தொடங்கினார்.
அவர் நாசிக்கில் வீட்டுக் குருவிகளுக்கு உதவிகளை செய்வதன் மூலம் இதனை தொடங்கி வைத்தார்.
2021 ஆம் ஆண்டிற்கான உலக சிட்டுக்குருவி தினத்தின் கருத்துரு, “நான் சிட்டுக் குருவிகளை நேசிக்கிறேன்” என்பதாகும்.
2010 ஆம் ஆண்டில் முதல் உலக சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்பட்டது.