கட்டுப்படுத்தும் துறையில் இராஜஸ்தான் மாநிலம் நிகழ்த்திய சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த ஆண்டின் உலக சுகாதார அமைப்பின் விருதுக்கு, அம்மாநிலத்தின் மருத்துவ மற்றும் சுகாதாரத் துறையைத் தேர்ந்தெடுத்துள்ளது.
WHO ஆனது இந்தப் புகழ்பெற்ற விருதுக்கு தென்கிழக்கு ஆசியப் பகுதிகளிலிருந்து ஐந்து அமைப்புகளைத் தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த விருதைப் பெறும் இந்தியாவின் ஒரே அரசு அமைப்பு இராஜஸ்தான் மாநிலச் சுகாதாரத் துறையாகும். அந்த அமைப்பு மேற்கொண்ட புகையிலையற்ற முன்னெடுப்புகளுக்காக இந்த விருது அதற்கு வழங்கப்படவிருக்கின்றது.
தென் கிழக்கு ஆசியப் பகுதிகளில் தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலிருந்து மூன்று அமைப்புகள் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
புது தில்லியில் உள்ள வல்லபாய் படேல் இதய நிறுவனமும் இந்த விருதைப் பெறும் அமைப்புகளில் ஒன்றாகும்.