உலக சுனாமி விழிப்புணர்வு தினமானது உலகம் முழுவதும் சுனாமி விழிப்புணர்வின் உலகளாவிய கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
இது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 5 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகிறது.
2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஐ. நா பொதுச் சபையானது நவம்பர் 5 ஆம் தேதியை உலக சுனாமி விழிப்புணர்வு தினமாகத் தேர்ந்தெடுத்துள்ளது.
கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட 58 சுனாமி சம்பவங்களானவை 2.6 லட்சத்திற்கும் அதிகமாக அல்லது ஒரு பேரழிவிற்குச் சராசரியாக 4,600 என்ற அளவில் உயிர்களைக் கொன்றுள்ளது.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி இந்தியப் பெருங்கடலில் மிக மோசமான சுனாமியின் நிகழ்வு பதிவு செய்யப் பட்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான சுனாமி விழிப்புணர்வு தினமானது "சென்டாய் ஏழு பிரச்சாரத்தின்” இலக்குகளை ஊக்குவிக்கின்றது.