TNPSC Thervupettagam

உலக தாய்ப்பாலூட்டும் வாரம் 2018

August 3 , 2018 2247 days 520 0
  • தாய்ப்பாலூட்டுவதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 01 முதல் ஆகஸ்ட் 07 வரை உலக தாய்ப்பாலூட்டும் வாரமாக (2018) அனுசரிக்கப்படுகிறது.
  • தாய்ப்பாலூட்டுவதன் மீதான யுனிசெப் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி உலகம் முழுவதும்8 கோடி குழந்தைகளுக்கு பிறந்த 1 மணி நேரத்திற்குள் தாய்ப்பால் அளிக்கப்படுவதில்லை என்று குறிப்பிடுகிறது.
  • குழந்தை பிறந்த 1 மணி நேரத்திற்குள் தாய்ப்பாலூட்டுதலை தொடங்க வேண்டும்.
  • இந்தியாவில் தாய்ப்பாலூட்டுதல் ஆனது 2005-ல்4 சதவீதத்திலிருந்து 2015-ல் 41.5 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
  • உலகம் முழுவதும் தாய்ப்பாலூட்டுதல் ஆனது 2015-ல் 37 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
  • தாய்ப்பாலூட்டுதல் குறைபாடானது கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவில் (65 சதவீதம்) அதிகமாகக் காணப்படுகிறது. இது கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக்கில் (32 சதவீதம்) குறைவாகக் காணப்படுகிறது.
  • பிறந்த 2 மணி முதல் 23 மணி நேரத்திற்குள் பாலூட்டப்படும் குழந்தைகள், பிறந்த 1 மணி நேரத்திற்குள் பாலூட்டப்படும் குழந்தைகளுடன்  ஒப்பிடும் போது இறப்பதற்கு 33 சதவீதம் அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகின்றன.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்