ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள 15வது உறுப்பினர்கள் மாநாட்டிற்கு முன்னதாக, பாலைவனமாக்குதலைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகளின் ஒப்பந்த அமைப்பானது 2வது நிலக் கண்ணோட்ட அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
பூமியின் நிலப்பரப்பில் 40% நிலப்பரப்பானது குறிப்பாக நவீன வேளாண்மையின் காரணமாக ஏற்கனவே சீரழிந்துவிட்டது.
2050 ஆம் ஆண்டிற்குள் தென் அமெரிக்காவின் பரப்பளவினை ஒத்த அளவிலான நிலத்தின் தரம் மேலும் கெடும் என்று இந்த அறிக்கை கணித்துள்ளது.