உலக நுரையீரல் புற்றுநோய் தினமானது நுரையீரல் புற்றுநோயின் தாக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 01 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப் படி இது 5-ல் ஒருவரின் புற்றுநோய் மரணத்திற்கு காரணமாகிறது.
புகையிலைப் பொருட்கள், தொழிலகப் பொருட்கள் (யுரேனியம், கதிர்வீச்சு, கல்நார்) காற்று மாசுபாடு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை புற்றுநோய் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.