TNPSC Thervupettagam

உலக போலியோ தினம் - அக்டோபர் 24

October 27 , 2018 2163 days 772 0
  • உலகம் முழுவதும் அக்டோபர் 24-ம் தேதி உலக போலியோ தினமானது போலியோ நோயால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகின்றது.
  • 2018 ஆம் ஆண்டிற்கான உலக போலியோ தினத்தின் கருத்துரு : ”தற்பொழுதே போலியோவை நிறுத்துங்கள்” என்பதாகும்.
  • இந்த தினம், 1955 ஆம் ஆண்டில் போலியோமெயிலிட்டிஸ் அல்லது போலியோவிற்கென்று முதலாவது வெற்றிகரமான தடுப்பு மருந்தைக் கண்டறிந்த ஜோனஸ் சால்க் என்ற அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர் மற்றும் வைரஸ் நிபுணரின் பிறந்த தினத்தை நினைவுபடுத்துகின்றது.
  • உலக சுகாதார நிறுவனத்தின் படி 1988 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட உலகளாவிய போலியோ ஒழிப்புத் திட்டம் 99 சதவிகிதம் அளவிற்கு போலியோவை ஒழித்திருக்கின்றது.
  • தற்போதைய நிலவரப்படி, உலக நாடுகளில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நைஜிரியா ஆகிய நாடுகளில் மட்டுமே போலியோ நோய் இருக்கின்றது.
  • போலியோவை ஒழிப்பதற்கு 2 வகையிலான தடுப்பு மருந்துகள் உள்ளன.
    • வாய் வழியிலான போலியோ தடுப்பு மருந்து
    • வீரியம் அழிக்கப்பட்ட போலியோ தடுப்பு மருந்து
  • வாய்வழியிலான போலியோ தடுப்பு மருந்து ஆல்பர்ட் சபீன் என்பவரால் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்