இத்தினமானது ஜோனஸ் சால்க் என்பவரின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் ரோட்டரி இண்டர்நேஷனல் என்ற அமைப்பினால் நிறுவப்பட்டது.
இவர் போலியோமைலிடிசிற்கு எதிரான தடுப்பூசியை உருவாக்குவதற்கான முதல் குழுவிற்குத் தலைமை தாங்கினார்.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “ஒரு நாள், ஒரு ஈடுபாடு: போலியோவை ஒழித்தல் – போலியோ இல்லாத உலகம் என்ற எங்களது வாக்குறுதியை நிறைவு செய்தல்” என்பதாகும்.
போலியோமைலிடிஸ் (Poliomyelitis) என்பது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளைத் தாக்கும் ஒரு தொற்று நோயாகும்.
2014 ஆம் ஆண்டில் இந்தியா போலியோ அற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.
இந்த நோயை முழுமையாக (100%) ஒழிக்கும் நோக்கத்துடன் 1995 ஆம் ஆண்டில் “பல்ஸ் போலியோ” என்ற திட்டமானது தொடங்கப்பட்டது.
வாய்வழியிலான போலியோ தடுப்பு மருந்தினைப் பயன்படுத்தி பல்ஸ் (தொடர்) தடுப்பூசி இயக்கம் 1981 ஆம் ஆண்டில் வேலூரில் நடத்தப்பட்டது.
போலியோ அல்லாத முதல் இந்திய நகரம் வேலூர் ஆகும்.
2011 ஆம் ஆண்டில் மேற்கு வங்காளத்தில் தான் கடைசியாக போலியோ நோய் பதிவானது.
இந்த போலியோ வைரசின் வலுவான கடைசியான பாதிப்பினை ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இன்னும் எதிர்கொண்டு வருகின்றன.