2022 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதியன்று, உலகின் மக்கள் தொகை 8 பில்லியன் (800 கோடி) என்ற அளவை எட்டியிருக்கின்றது.
உலக மக்கள்தொகை, 2030 ஆம் ஆண்டு வாக்கில் 8.5 பில்லியன் என்ற அளவிற்கும், 2050 ஆம் ஆண்டு வாக்கில் 9.7 பில்லியன் என்ற அளவிற்கும், 2100 ஆம் ஆண்டு வாக்கில் 10.4 பில்லியன் என்ற அளவிற்கும் உயர்ந்திடும்.
எனினும், உலகின் மக்கள்தொகை 7 பில்லியனிலிருந்து 8 பில்லியனிற்கு உயர்ந்திட 12 வருடங்களை எடுத்துக் கொண்டாலும், அடுத்து 9 பில்லியன் அளவினை எட்டிட தோராயமாக 12 வருடங்களை, அதாவது 2037 ஆம் ஆண்டில், அதை எட்டும்.
வருடாந்திரமான உலக மக்கள்தொகை வள அறிக்கையும் 1950 ஆம் ஆண்டிலிருந்து உலகின் மக்கள்தொகை மிகக் குறைவான வேகத்தில் மட்டுமே உயர்ந்து வருகின்றது என்பதையும் கோடிட்டுக் காட்டியுள்ளது.
2020 ஆம் ஆண்டில் இது ஒரு சதவிகிதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டில், மிக அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டு பிராந்தியங்களுமே, 2.3 பில்லியன் மக்கள்தொகையுடன் தென்கிழக்கு ஆசியாவும் 2.1 பில்லியன் மக்கள் தொகையுடன் மத்திய மற்றும் தெற்காசியாவும் என ஆசியாவிலேயே அவை அமைந்து உள்ளன.
ஐக்கிய நாடுகள் அவையின் கணிப்பின்படி, 2023 ஆம் ஆண்டு வாக்கில் உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனாவை விஞ்சி இந்தியா உருவெடுக்க இருக்கின்றது.
உலகின் மொத்த அளவில் மூன்றில் ஒரு பங்கினை சீனாவும் இந்தியாவும் கொண்டு உள்ளன.
சீனாவிற்கான உலக வங்கியின் கணிப்பின்படி 1.4 பில்லியன் மக்கள்தொகையை விட இந்தியா ஆனது மக்கள்தொகையை 1.38 பில்லியன் எனக் கணித்துள்ளது.
2050 ஆம் ஆண்டு வரையில் உலக மக்கள்தொகையில் பாதியளவிற்கும் மேலான அளவில் எகிப்து, காங்கோ, எத்தியோப்பியா, நைஜீரியா, இந்தியா, பாகிஸ்தான், தான்சானியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய 8 நாடுகளில் மட்டும் கணிக்கப்பட்ட அதிகரிப்பு இருக்கும்.