இது 1989 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தால் நிறுவப் பட்டது.
இது ‘ஐந்து பில்லியனின் நாள்’ என்பதின் மூலம் கருத்தாக்கம் செய்யப் பட்டது.
உலக மக்கள் தொகையானது 5 பில்லியனைத் தாண்டிய தினமாக தோராயமாக 1987 ஜூலை 11 அன்று கருதப்பட்டு அன்று இது அனுசரிக்கப் பட்டது.
‘வீட்டில் அமைதி: பெண்கள் மற்றும் சிறுமிகளின் உடல்நலம் மற்றும் உரிமைகளைப் பாதுகாத்தல் - கோவிட் 19 தொற்றின் சமயத்திலும்’ என்பதின் மீது 2020 ஆம் ஆண்டு கவனம் செலுத்தும்.
2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கணக்கிட்ட சமயத்தில், உலக மக்கள் தொகை 7.8 பில்லியனைத் தாண்டி விட்டதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் படி, அடுத்த 3 தசாப்தங்களில் உலகில் மனித மக்கள் தொகை சுமார் 10 பில்லியனை எட்டும்.