மனித நல்வாழ்வு, உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு மண்ணின் தரத்தின் முக்கியத்துவம் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தினமானது முதன்முதலாக 2002 ஆம் ஆண்டில் சர்வதேச மண் அறிவியல் சங்கத்தினால் கருத்தாக்கப்பட்டது.
2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது டிசம்பர் 05 ஆம் தேதியை உலக மண் தினமாக அறிவித்தது.
2022 ஆம் ஆண்டிற்கான உலக மண் தினத்தின் கருத்துரு, 'மண்: உணவு உற்பத்தி துவங்கும் இடம்’ என்பதாகும்.