TNPSC Thervupettagam

உலக மனித நேய தினம் – ஆகஸ்ட் 19

August 20 , 2019 1867 days 994 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 அன்று உலக மனித நேய தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்த சர்வதேசத் தினமானது மனித நேயம் மிக்கவர்களை அங்கீகரிப்பதற்காகவும் மனிதாபிமான காரணங்களுக்காகப் பணியாற்றி உயிர் நீத்தவர்களை அங்கீகரிப்பதற்காகவும் அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
  • 2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று ஐ.நா.வின் தலைமையகமான ஈராக்கில் உள்ள பாக்தாத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஐ.நாவின் தூதுவரான செர்ஜியோ வெயிரா டி மெலோ மற்றும் 20 நபர்கள் கொல்லப்பட்டதை இத்தினம் அனுசரிக்கின்றது.
  • அதன் பிறகு  5 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது ஆகஸ்ட் 18 ஆம் தேதியை உலக மனிதநேய தினமாக அறிவிப்பதற்கான ஒரு தீர்மானத்தை அதிகாரப் பூர்வமாக ஏற்றுக் கொண்டது.
  • 2019 ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு, “பெண் மனிதநேய வாதிகள்” என்பதாகும்.
  • இது போரின்போது மற்றும் உலகில் போரினால் பாதிக்கப்பட்ட பிற பகுதிகளில் முன்னணியில் பணியாற்றும் பெண் மனித நேயவாதிகளக்கு மரியாதை செல்லுவதைக் குறிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்