TNPSC Thervupettagam

உலக மன இறுக்க நோய் விழிப்புணர்வு தினம் – ஏப்ரல் 02

April 3 , 2020 1639 days 399 0
  • இத்தினமானது ஐக்கிய நாடுகள் அமைப்பினால் அனுசரிக்கப் படுகின்றது.
  • இது உடல் நலம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அதிகாரப் பூர்வமான 7 தினங்களில் ஒன்றாகும்.
  • இது 2007 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • இது மன இறுக்கப் பிரச்சனை குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “முதிர்வயது நிலையைக் கவனித்தல்” (The Transition to Adulthood) என்பதாகும்.
  • மன இறுக்க நோயுடன் உள்ள மக்களை அங்கீகரிப்பதற்காக “நீல நிற ஒளியினை” ஏற்படுத்துவதற்காக உலகம் ஒன்றிணைகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்