1997 ஆம் ஆண்டில் புதுடெல்லியில் நடைபெற்ற “உலக மீன் வளர்ப்பு மற்றும் மீன் தொழிலாளர் மன்றத்தின்” போது தொடங்கப்பட்டது.
இது 18 நாடுகளின் பிரதிநிதிகளுடன் கூடிய "உலக மீன்வள மன்றம்" நிறுவப் படுவதற்கு வழிவகுத்தது.
புதுடெல்லியில் நடைபெற்ற சர்வதேச மீன்வள அமைப்பின் தொடக்க விழாவைக் குறிக்கும் வகையில், 2015 ஆம் ஆண்டில் முதலாவது உலக மீன்வள தினமானது கொண்டாடப் பட்டது.
மீன்வளத் துறையானது, இந்த ஆண்டு வளமான கடல் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் நிலையான மீன்வளத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், டாமன் பகுதியில் இத்தினத்தைக் கொண்டாடியது.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, மொத்த உலக மீன்வளத்தில் மூன்றில் இரண்டு பங்கு மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன.
மீன் வளர்ப்பு தொழில் மூலம் மீன் உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது.
உலக மீன் உற்பத்தியில் இந்தியா 7.7% பங்கினைக் கொண்டுள்ளதால், உலகளவில் நான்காவது பெரிய மீன் ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது.
2021 ஆம் ஆண்டில், பாலசோர் மாவட்டம் (ஒரிசா) இந்தியாவின் "சிறந்த கடல்சார் மாவட்டம்" என்ற விருதைப் பெற்றது.