TNPSC Thervupettagam

உலக முதலை தினம் – ஜுன் 17

June 20 , 2020 1561 days 575 0
  • இந்தியா 3 முதலை இனங்களுக்கு வாழிடமாகத் திகழ்கின்றது. அவையாவன:
    • சதுப்பு நில முதலை
    • உவர் நீர் முதலை (அ) செம்மூக்கு  முதலை மற்றும்
    • கரியால்
  • சதுப்பு நில முதலையானது பெரும்பாலும் ஏரிகள், ஆறுகள் மற்றும் சதுப்பு நிலங்கள் ஆகியவற்றில் காணப்படும் ஒரு நன்னீர் வகை உயிர் இனமாகும்.
  • இது இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் காணப்படுகின்றது.
  • உவர்நீர் முதலையானது ஒடிசாவின் பித்தர்கனிகா தேசியப் பூங்கா, மேற்கு வங்காளத்தில் உள்ள சுந்தரவனக் காடுகள், அந்தமான் நிக்கோபர் தீவுகள் ஆகியவற்றில் காணப்படுகின்றது.
  • கரியால் பெரும்பாலும் இமயமலையில் உற்பத்தியாகும் ஆறுகளில் காணப் படுகின்றது.
  • இது “மிக அருகிய இனமாகப்” பட்டியலிடப் பட்டுள்ளது.
  • தேசிய சம்பல் கரியால் வனவிலங்குச் சரணாலயம் என்றும் அழைக்கப்படும் தேசிய சம்பல் சரணாலயமானது வட இந்தியாவில் உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும்.
  • இது இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய  3 மாநிலங்கள் சந்திக்கும் இடத்திற்கு அருகில் சம்பல் நதிக் கரையில் அமைந்து உள்ளது.
  • முதலைப் பாதுகாப்புத் திட்டமானது 1975 ஆம் ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் தொடங்கப் பட்டுள்ளது.
  • கரியால் மற்றும் உவர்நீர் முதலைப் பாதுகாப்புத் திட்டமானது 1975 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முதன்முதலில் ஒடிசா மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டது. அதன் பிறகு சதுப்பு நில முதலைப் பாதுகாப்புத் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.
  • “CrocBITE” என்பது மனிதர்களின் மீதான முதலைகளின் தாக்குதல்களைப் பதிவு செய்யும் ஒரு நிகழ்நேரத் தரவுத் தளமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்