TNPSC Thervupettagam

உலக மேசைப் பந்தாட்ட சாம்பியன்ஷிப்

November 18 , 2018 2072 days 566 0
  • மியான்மரின் யாங்கோனில் நடைபெற்ற மேசைப் பந்தாட்டத்தின் IBSF சாம்பியன்ஷிப்பில் 150-UP என்ற பிரிவில் இந்திய வீரரான பங்கஜ் அத்வானி வெற்றி பெற்றார்.
  • இது 150-UP என்ற பிரிவில் இவரின் மூன்றாவது நேர் IBSF (International Billiards and Snooker Federation) மேசைப் பந்தாட்ட வெற்றியாகும்.
  • இவர் இறுதிப் போட்டியில் மியான்மரின் நோய் த்வே ஓவைத் தோற்கடித்து உலக மேசைப் பந்தாட்டத்தின் (150-Up) 2018 ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.
  • இந்த வெற்றியின் மூலமாக இவர் தனது உலக அளவிலான பட்டங்களை 20 ஆக உயர்த்தியுள்ளார்.
  • இவர் இதற்கு முன்னதாக 2016 ஆம் ஆண்டில் பெங்களூருவில் நடைபெற்ற போட்டியிலும், 2017 ஆம் ஆண்டில் கத்தாரின் தோகாவில் நடைபெற்ற போட்டியிலும் 150-Up என்ற பிரிவில் இரண்டு பட்டங்களையும் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்