TNPSC Thervupettagam
March 13 , 2018 2321 days 686 0
  • ஸ்பெயின் நாட்டின் பெரியா டீ மாட்ரிட் நகரில் மார்ச் 6 முதல் 8 வரை உலக ATM மாநாடு ( World ATM Congress / WATMC – 2018) நடைபெற்றது.
  • ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இம்மாநாடானது, உலகின் மிகப்பெரிய சர்வதேச விமானப் போக்குவரத்து மேலாண்மைக் கண்காட்சி (ATM – Air traffic Management)  மற்றும் மாநாடாகும். ஆண்டுதோறும் பல்வேறு  விமானத் துறைசார் பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர்.
  • இந்தியாவிலிருந்து இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India-AAI)    இந்த மாநாட்டில்  பங்கெடுத்து தன்னுடைய தொடக்கங்கள் (initiatives) மற்றும் சாதனைகளை காட்சிப்படுத்தியது.
  • விமானப் போக்குவரத்து சேவைக் கழகமும் (Civil Air Navigation Services Organization-CANSO) விமானப் போக்குவரத்துக்  கட்டுப்பாட்டுச் (Air Traffic Control Association -ATCA)  சங்கமும் இணைந்து இம்மாநாட்டை நடத்துகின்றன.
  • விமானப் போக்குவரத்துத் துறையில் உள்ள  உலகின் முன்னணி  விமான உதிரிபாக தயாரிப்பாளர்கள், நிபுணர்கள், பங்குதாரர்கள் விமானப் போக்குவரத்து மேலாண்மையில் தங்களுக்குள்ள அனுபவம் மற்றும்  சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கு அவர்களை  ஒரே  தளத்தில் ஒங்கிணைப்பதற்காக இம்மாநாடு நடத்தப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்