உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட HPV பரிசோதனைக் கருவிகள்
April 29 , 2025 13 hrs 0 min 24 0
இந்திய நாடானது, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனைக்காக வேண்டி உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட HPV சோதனை கருவிகளை அறிமுகப் படுத்தி உள்ளது.
இந்த முக்கியமான அறிமுகமானது, "இந்தியாவில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனைக்கான உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) சோதனைகளைச் சரிபார்த்தல்" என்ற தேசியத் திட்டத்தின் ஒரு உச்ச நிலையைக் குறிக்கிறது.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஆனது, இந்தியப் பெண்களிடையே மிக அதிகளவில் நிலவும் இரண்டாவது மிகவும் பொதுவான புற்றுநோயாக உள்ளது என்பதோடு மேலும் இந்தியா உலகளாவிய புற்றுநோய்ப் பாதிப்புகளில் அதிகப் பங்கினைக் கொண்டதாக உள்ளது.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் ஏற்படும் உலகளாவிய உயிரிழப்புகளில் சுமார் 25% இந்தியாவில் பதிவாகிறது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பரிசோதனைக் கருவிகள் தேசிய சுகாதாரத் திட்டங்கள் மூலம் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.