மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்வயம் ஷிக்சன் பிரயோக் அமைப்பானது உள்ளூர் ஏற்பு சாம்பியன்ஸ் விருதினைப் பெற்றுள்ளது.
இந்த விருது விழாவானது எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் நகரில் சமீபத்தில் நடைபெற்ற 27வது பங்குதாரர்கள் மாநாட்டில் உலக ஏற்பு நிலை மையத்தின் (GCA) மூலம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இது ‘திறன் மற்றும் அறிவு’ என்ற பிரிவில் விருதினை வென்றது.
மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதியில் பெண் விவசாயிகள் அதிக நெகிழ்திறன் மிக்க மற்றும் நிலையான வேளாண் நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு ஆதரவு அளிக்கும் வகையிலான அந்த நிறுவனத்தின் பணிக்காக இந்த விருதானது வழங்கப் பட்டுள்ளது.