OPEC+ என்ற அமைப்பானது எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு 2 மில்லியன் பீப்பாய்கள் (bpd) என்ற அளவிற்குக் குறைப்பதற்கு முடிவு செய்துள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய குறைப்பு இதுவாகும்.
பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பானது 1960 ஆம் ஆண்டில் ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா மற்றும் வெனிசுலா ஆகிய ஸ்தாபன உறுப்பினர் நாடுகளால் நிறுவப்பட்டது.
அதன் பிறகு பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு விரிவாக்கப் பட்டு, அது தற்போது 13 உறுப்பினர் நாடுகளைக் கொண்டுள்ளது.
ரஷ்யாவை உள்ளடக்கிய மற்ற முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளான 11 நட்பு நாடுகளின் சேர்க்கையுடன் இந்தக் குழுவானது OPEC+ என அழைக்கப்படுகிறது.