சூடான் எபோலா வைரசினால் ஏற்பட்ட எபோலா பெருந்தொற்றானது உகாண்டாவில் முடிவுக்கு வந்ததாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதியன்று மத்திய முபெண்டே மாவட்டத்தில் இந்த நோயின் முதல் பாதிப்பானது உறுதி செய்யப்பட்டது.
இது ஒரு தசாப்தத்தில் ஏற்பட்ட உகாண்டாவின் முதல் சூடான் எபோலா வைரஸ் பெருந் தொற்றாகும் என்பதோடு, இது ஒட்டு மொத்தமாக உகாண்டாவில் ஏற்பட்ட ஐந்தாவது பெருந்தொற்றாகும்.
எபோலா வைரஸ் நோய் என்பது எபோலா வைரஸ் திரிபுகளுள் ஒன்றினால் ஏற்படும் தொற்று காரணமாக ஏற்படுகின்ற அரிதான மற்றும் கொடிய நோயாகும்.
இந்த வைரஸ் ஆனது முதன்முதலில் 1976 ஆம் ஆண்டில் எபோலா நதிக்கு அருகில் கண்டறியப் பட்டது.
உகாண்டாவில் ஏற்பட்டுள்ள இந்தப் தொற்றுப் பெருவெடிப்பானது, சூடான் எபோலா வைரசினால் ஏற்பட்டதாகும்.
எபோலா வைரஸின் ஆறு வகைகளில் இதுவும் ஒன்றாகும் என்பதோடு, இதனைத் தடுப்பதற்காக வெற்றிகரமான தடுப்பூசி எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை.