உலகெங்கிலும் உள்ள 5 இறுதிப் போட்டியாளர்களிலிருந்து இரண்டு இந்தியத் திட்டங்கள் இப்பரிசிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அவற்றுள் ஒன்று தமிழகத்தைச் சேர்ந்த வினிஷா உமா சங்கர் என்பவரால் வடிவமைக்கப் பட்ட சூரிய சக்தியால் இயங்கக் கூடிய இஸ்திரி வண்டி (Solar Powered Ironing Cart) ஆகும்.
இரண்டாவது டெல்லியைச் சேர்ந்த வித்யுத் மோகன் என்பவருடன் இணைந்து தக்சாச்சர் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு வேளாண் கழிவு மறுசுழற்சி என்ற கருதுகோள் ஆகும்.
இது 2020 ஆம் ஆண்டில் பிரிட்டனின் இளவரசர் வில்லியம் (கேம்பிரிட்ஜ் அரசர்) மற்றும் டேவிட் அட்டன்பெர்க் ஆகியோரால் தொடங்கப்பட்ட முதலாவது சுற்றுச்சூழல் பரிசாகும்.
இது இங்கிலாந்தில் ராயல் பவுண்டேசன் என்ற அமைப்பினால் வழங்கப்படுகிறது.