அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா கந்து ஆகியோர் எல்லைப் பிரச்னை தொடர்பான மூன்றாவதுச் சந்திப்பினை மேற்கொண்டனர்.
அவர்கள் கூட்டாக இணைந்து ‘நம்சாய் பிரகடனத்தினை’ வெளியிட்டனர்.
இந்த இரண்டு முதல்வர்கள் இடையே, இந்த ஆண்டு ஜனவரி 24 மற்றும் ஏப்ரல் 20 ஆகிய தேதிகளில் முதல் இரண்டு சந்திப்புகள் நடைபெற்றன.
1960 ஆம் ஆண்டின் போது, உயர் அதிகாரம் கொண்ட ஒரு முத்தரப்புக் குழுவால் தயாரிக்கப் பட்ட 29 விதிமுறைகளின் பேரில் எல்லைக் கோடு வரையறுக்கப்பட்டு கையொப்பமிடப் பட்டு, அங்கீகரிக்கப்பட்ட எல்லையாக இது அறிவிக்கப்பட்டது.
இந்த இரு மாநிலங்களும் 12 "பிராந்தியக் குழுக்களை" அமைக்க முடிவு செய்தன.
இது ஒவ்வொன்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் 12 மாவட்டங்களையும், அதற்கு இணையான அசாமின் மாவட்டங்களையும் உள்ளடக்கிய 123 கிராமங்களின் மீது கூட்டுச் சரிபார்ப்பினை மேற்கொள்ளும்.
பிராந்தியக் குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒரு இறுதி முடிவு எடுக்கப் படும்.
அருணாச்சலப் பிரதேசத்தின் அரசியலமைப்பு எல்லைக்குள் இருக்கும் 28 கிராமங்கள் இதனுடன் இருக்கும்.
அருணாச்சலப் பிரதேசத்தினால் உரிமைக் கோரல்கள் திரும்பப் பெறப்பட்ட 3 கிராமங்கள் அசாமுடன் இருக்கும்.