TNPSC Thervupettagam

எஸ்ஸார் ஸ்டீல் தீர்ப்பு - மைல்கல் தீர்ப்பு

November 30 , 2019 1695 days 665 0
  • இந்த முக்கியத் தீர்ப்பில், நிதி விநியோகம் மீதான உரிமை கோரல் தொடர்பாக திவாலான நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கிய வங்கிகள் அடங்கிய “கடன் வழங்குநர்கள் குழுவின்” முன்னுரிமையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
  • உச்ச நீதிமன்றமானது, நிறுவனம் இயங்குவதற்கான மூலப்பொருள்களையும் சேவையையும் அளித்தவர்களைக் காட்டிலும் நிறுவனத்துக்குக் கடனாக நிதி வழங்கியவர்களுக்குத் தான் அதிக முன்னுரிமை தரவேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளது.
  • நிறுவனத்தின் நொடிப்பு நிலை நடவடிக்கைகளின் போதும், கடனில் பாதிக்கப்பட்ட நிறுவனத்தை மற்றொரு நிறுவனம் கையகப்படுத்தும் போதும் இந்த கடனை அளிப்பவர்கள் குழு இரண்டையும் ‘வித்தியாசமாக’ தனிப்பட்ட முறையில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பின்னணி

  • தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் அகமதாபாத் அமர்வானது 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆர்சிலர் மிட்டல் என்ற உலகளாவிய எஃகு நிறுவனமானது  எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தை ஏலத்தில் எடுக்க அனுமதி அளித்தது.
  • ஆர்சிலர் மிட்டல் நிறுவனம்  எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்துக்கு அளிக்க வேண்டிய நிதிச் சலுகைகளானது  அந்த நிறுவனம் இயங்குவதற்கான மூலப்பொருள்களையும் மற்ற பிற சேவைகளையும்  அளித்தவர்களை உள்ளடக்க வில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்