2022 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களுக்கான மூன்றாவது ஏற்றுமதித் தயார்நிலைக் குறியீட்டு அறிக்கையினை (EPI) நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மாவட்டங்களை நாட்டின் ஏற்றுமதி மையங்களாக மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த அறிக்கை எடுத்துரைக்கிறது.
இது நாட்டிலுள்ள சரக்கு ஏற்றுமதியின் மாவட்ட அளவிலான நிலையில் ஒரு முக்கியப் பகுப்பாய்வினை மேற்கொள்கிறது.
ஏற்றுமதித் தயார்நிலைக் குறியீடானது கொள்கை, வணிக சூழல் அமைப்பு, ஏற்றுமதி சூழல் அமைப்பு மற்றும் ஏற்றுமதிச் செயல்திறன் ஆகிய நான்கு முக்கியப் பிரிவுகளில் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் செயல்திறனை மதிப்பிடுகிறது.