TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்புடனான ஒப்பந்தம்

March 5 , 2023 505 days 264 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்புடனான (UNEP) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டுள்ளது.
  • இது தமிழ்நாட்டில் நகர்ப்புறக் குளிரூட்டல் தொழில்நுட்பத் திட்டத்தினை உருவாக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ‘குளிரூட்டல் தொழில்நுட்பக் கூட்டணி’ மற்றும் இந்திய-டென்மார்க் பசுமை உத்திசார் கூட்டாண்மை ஆகியவற்றின் கட்டமைப்பின் கீழ் இந்தத் திட்டமானது மேற் கொள்ளப் படுகிறது.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தமானது, நிலையான குளிரூட்டல் தொழில்நுட்பத்தில் பல்வேறு பங்குதாரர்களின் திறன் மேம்பாட்டினை எளிதாக்குகிறது.
  • இது இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்குப் பயிற்சி அளித்தல் மற்றும் மற்ற நாடுகள் இந்தத் திட்டத்தின் மூலம் நடைமுறைகளிலிருந்துக் கற்றல் என்ற முறை மூலம் தெற்கு நாடுகளிடையேயான ஒத்துழைப்பினை மேம்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்