ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் உக்ரைன் மீதான செயல்முறை வாக்கெடுப்பு
August 28 , 2022 695 days 323 0
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் மேற்கொள்ளப்பட்ட உக்ரைனுக்கு எதிரான ஒரு செயல்முறை வாக்கெடுப்பின் போது, இந்தியா, முதல் முறையாக, ரஷ்யாவிற்கு எதிராக வாக்களித்தது.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை காணொளிக் காட்சி மூலம் ஒரு சந்திப்பில் உரையாற்ற அழைப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வாக்கெடுப்பை நடத்தியது.
ரஷ்யத் தூதர் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியைச் சபையில் உரையாற்ற அனுமதிக்கும் விவகாரத்தின் மீது ஒரு செயல்முறை வாக்கெடுப்பினை மேற்கொள்ளுமாறு கோரினார்.
இந்தியா தற்போது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தன் பதவிக் காலம் டிசம்பர் மாதத்தில் முடிவடைகிற நிலையில் இரண்டு வருடக் காலத்திற்கு ஒரு நிரந்தரமற்ற உறுப்பினராக உள்ளது..
ரஷ்யாவின் கோரிக்கையை ஏற்று, ஒரு செயல்முறை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 15 உறுப்பினர் நாடுகளில் 13 நாடுகள் ஜெலென்ஸ்கியைச் சபையில் உரையாற்ற அனுமதிப்பதற்கு ஆதரவாக வாக்கு அளித்தனர்.
இதற்கு ரஷ்யா எதிராக வாக்களித்த நிலையில் சீனா இதில் வாக்களிப்பைப் புறக்கணிக்க முடிவு செய்தது.
செயல்முறை வாக்கெடுப்பின் மீதான பாதுகாப்புச் சபையின் முடிவுகள் அதன் ஒன்பது உறுப்பினர்களின் ஒரு உறுதியான வாக்கெடுப்பு மூலம் மேற்கொள்ளப் படும்.