ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 75வது அமர்வானது 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 15-30 வரை காணொலி முறையில் நடத்தப்பட்டது.
இது துருக்கியின் வோல்கன் போஸ்கிர் என்பவரின் தலைமையின் கீழ், நியூயார்க் நகரிலிருந்து அமெரிக்காவினால் நடத்தப்பட்டது.
இந்த அமர்வின் கருத்துரு, “நமக்குத் தேவையான எதிர்காலம், நமக்குத் தேவையான ஐக்கிய நாடுகள், பல்தரப்பிற்கான நமது கூட்டு உறுதிப்பாடுகளை உறுதி செய்தல், திறன் வாய்ந்த பல்தரப்பு நடவடிக்கையின் மூலம் கோவிட் – 19 தொற்றை எதிர்கொள்தல்” என்பதாகும்.
இந்த அமர்வின்போது, ஐக்கிய நாடுகளின் 75வது நினைவு தினத்தைக் குறிப்பதற்காக 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 அன்று ஒரு சிறப்பு நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தநிகழ்வானது “நமக்குத் தேவையான எதிர்காலம், நமக்குத் தேவையான ஐக்கிய நாடுகள், பல்தரப்பிற்கான நம்முடைய கூட்டு உறுதிப்பாட்டை உறுதி செய்தல்” என்ற கருத்துருவின் கீழ் நடத்தப்பட்டது.
ஐக்கிய நாடுகளின் 75வது நினைவு தினத்தைக் குறிப்பதற்கான ஒரு பிரகடனமானது தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுதல், பன்மைவாதத்தை சீர்திருத்துதல், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, கோவிட் – 19 கொள்ளை நோய் போன்ற சவால்களை எதிர் கொள்வதற்கான தயார் நிலை ஆகியவற்றிற்கான நடைமுறைகளை வலுப்படுத்துவதற்காக வேண்டி நடத்தப்பட்ட உயர்மட்டக் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.